Wednesday 17 July 2013

வான் முத்தங்கள் !

சூராவளியாய் கடலில் நீரெடுத்து 
வானத்துக்கு மணமுடித்து 
மோகங்கொண்டு மேகமாய் 
கருவாகி காற்றின்கற்பம் 
மின்னலாய் உடைத்து 
இடியோசையுடன் பிரசவித்து 
மழைக்குழந்தைகளாய் 
இயற்கை வளங்களில் 
இனிமையான விளையாட்டு 
முத்தழகு குழந்தைகள் 
பூமியை முத்தமிடும் மழைத்துளிகள்...!

6 comments:

  1. என்னவொரு கற்பனை...!

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  2. வணக்கம்!

    கவிசோலை கண்டேன்! கனிந்தவுன் ஆக்கம்
    புவிசோலை பூக்கும் பொலிந்து

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா நிட்சயமாக மகிழ்ச்சி பூக்களாய் பூக்கும் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
  3. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete