Wednesday 11 December 2013

கவிச்சோலை: காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும்...

கவிச்சோலை: காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும்...: கவிச்சோலை: தங்கம் நீ ! : தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றல...

காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும் இதயம் இழந்து உன் நினைவுகள் சுமந்த உயிரின் ஓசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது நம் காதலை!!!

கவிச்சோலை: தங்கம் நீ !: தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றலுக்கு  காத்திருக்கும் ...

Monday 9 December 2013

கவிச்சோலை: உலக சாதனைக் கவியரங்கம் !

கவிச்சோலை: உலக சாதனைக் கவியரங்கம் !: தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கமும் தென்றல் சமூக நல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் உலக சாதனைகவியரங்கில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா? ...

Wednesday 20 November 2013

உலக சாதனைக் கவியரங்கம் !

தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கமும் தென்றல் சமூக நல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் உலக சாதனைகவியரங்கில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா? கடைசி தேதி இந்த மாதம் 30ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் இந்த சந்தற்பத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள் கவிதைகளை உடனே அனுப்பிவையுங்கள் நண்பர்களே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பியுங்கள் என அன்போடு அழைக்கிறோம் கவிதைகள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி tamilkavinjarsangam@gmail.com வருக வருக பங்கு பெறுக வாழ்த்துக்கள்

Tuesday 29 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் ! ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதை .



புத்தாடை பூத்தது புது உலகம் பிறந்தது
புதுமை மனப் பூரிப்பூ எழிலாய் உள்ளப் பொழிவு!

எண்ணங்களில் வண்ண வண்ண பூக்களாய் 
வீதியெங்கும் ஒளி வெள்ள பேரழகு! 

வெடியோசை மின்னல் இடியாய் 
வண்ண வான வேடிக்கை! 

மத்தாப்பூ சிரிப்பாய் மனம் கொண்டாடும் 
மகத்தான பெருநாள்! 

உற்றார் உறவினரும் ஒருமித்த அன்பாய் 
தித்திக்கும் இனிப்போடும் திகட்டா களிப்போடும் 
திகட்டாத அன்போடும்! 

எல்லைகள் கடந்த இன்பப் பெருங்கடலாய் 
இல்லங்கள் தோரும் மற்றவர் மகிழ்ச்சியில் 
மனப் பெருமிதம் கொண்டு .

அன்பு ஊற்றாய் பெருகி உள்ளம்
கொள்ளை கொள்ளும் உண்ணத திருநாள்! 

இருண்ட அரக்கனை அழித்து 
மகாபாரதத்தின் சுதந்திர விடியலாய் 
ஒளிதீபம் ஏற்றிடும் மகாதினம்! 

ஏழைகள் நெஞ்சிலும் மகிழ்ச்சிப் பெருக்கோடு 
இன்முகச் சிரிப்பழகு காணும் இனிய திருவிழா! 

மலர்விழி பூத்த அரும்பு மழலைகளின் 
மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பாய் 
முத்தாய்ப்பாய் உள்ளம் மகிழும் ஒளிவிழா! 

வானம் விட்டு வான வில்லும் இறங்கி வந்ததோ
வாசல்தோரும் சிறுவர்களின் கரங்களிலே 
காட்சி தந்ததோ!!! 

மழலைகளின் சிரிப்பினிலே மயங்கிவிட்டதோ 
வானவில்லும் வானத்துக்கு வழி கேட்டு 
வீதியெல்லாம் சுற்றி வருகுதோ ?

ஏழுவண்ணம் வீதிகளில் ஊர்வலமாய் 
நடந்து செல்லும் பேரழகு காண்பீரோ......! 

இன்று வெண்ணிலவும் விடுமுறையில் 
பூமி வந்ததோ? நம் இல்லங்களில் 
நடமாடும் மங்கையரின்  முகத்தினிலே 
அமர்ந்துகொண்டதோ ?
ஆனந்தமாய் நாம் கொண்டாடும் 
தீபாவளி நன்னாளே.....!

Wednesday 23 October 2013

நீயே என் மருந்தகம் !

நீயே என் மருந்தகம்        
அன்பே என் உழைப்பின்
இடையே நான்
கழைப்படையும் போதெல்லாம்
உன் நினைவுகளை
அள்ளிப் பருகுகிறேன்
காலை முதல் உழைத்து
மாலை உன் முகம்
காணும் போது
உன் குளிர்ந்த பார்வை
என் உடல் ரணங்களுக்கு
மருந்திடுகிறது
மறு கணம் உன் அணைப்பில்
ரணமான வலியெல்லாம்
மாயமாய் மறைகிறது
அன்பே நீயே என் மருந்தகம்...

Tuesday 22 October 2013

அன்பு !

அன்பு என்ற ஒற்றை
வார்த்தையில்தான்
உலகத்தில் உள்ள
அத்தனை சுகங்களும்
அடங்கியிருக்கிறது...

அம்மா !

அம்மா என்ற
ஒற்றை வரியில்தான்
உலகத்தில் உள்ள
அத்தனை வார்த்தைகளும்
அடங்கியிருக்கிறது.

Friday 18 October 2013

உலக சாதனையில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா?





அழைக்கிறோம் கவிஞர்களை - இணைந்து
படைத்திடுவோம் உலகசாதனையை.

அன்புடன்,

கவி நாகா 

Saturday 5 October 2013

கதை சொல்லும் களத்துமேடு !

எட்டு வச்சி நான் வந்தேன்
எட்டு மாசம் உன்ன சுற்றி
கட்டெறும்பாஓடி வந்தேன் .
அச்சு வெல்ல பேச்சழகில்
கருவிழியால் காதல் சொன்ன
கட்டழகி முத்தம்மா
ஒருநாள் காணலேனா
 அடி மனசு வலிக்குமடி
ஆத்தா அப்பன்
தடைபோட அழுது கலங்கி
மனம் தவிச்சு இருப்பதேனோ ?
நாம் காதலிச்ச கதையெல்லாம்
களத்துமேடு சொல்லுமடி
எத்தனை நாள் காத்திருந்தேன்
ஏங்கி நானும் தவிச்சிருந்தேன்
நான் அள்ளி வச்ச ஆசையில
கொள்ளிவச்சி போறியேடி
இடி போலவார்த்தை சொல்லி
எம்மனசு களங்குதடி
செத்த நேரம் நில்லு புள்ள
சுத்தமான காதல் இது
சத்தியமா கைகூடும்
ஆத்தா கருமாரி
நம் காதலுக்கு துணையிருப்பாள்
கலங்காதே கண்மணியே

கைப்பிடிப்பேன் நான் உனையே......

Thursday 3 October 2013

மழழை மொழியில் தமிழை பதிவு செய்வோம்!


அழ வள்ளியப்பன் நிலவொளியில்
அல்லிமலர் மழழைகளாய்!
கல்வி என்ற சோலையிலே
பூத்திருக்கும் விடி வெள்ளி
மலர்க் குழந்தைகளே

உன் பூவிதழின்
வாசத்திலே பெருமிதமே!
புன்னகை பூப்பூக்கும் பேரழகே!
கார்முகிலாய்
கனிமொழி பொழியும்
காலம் தந்த சீதனமே!
அன்னை மொழியாம்
அமுத தமிழை
நாவினில் கொஞ்சிடு
தங்கமே
உன் பிள்ளைத் தமிழால்
அன்னைக்கும் சொல்லிக்கொடு
மம்மி இல்ல அம்மா என்று!
தனித் தமிழில் உரையாடு
தரணியெங்கும் தமிழின் புகழ்பாடு
தமிழ் எந்தன் உயிரென்று
தமிழாலே இசைபாடி
தலைநிமிர்ந்து நீ வாழு!
யாழ் மீட்டும் இசையாய்
செவ்வாய் முட்டும் தமிழால்
மழலை மொழித் தேன் சிந்து!
வான் போற்றும் வள்ளுவனாய்
தான் போற்றி வாழ்ந்திருப்பாய்.

Monday 2 September 2013

அனைவரும் வருக...!

வாய்ப்புத்  தேடி கனவு காணும் உறவுகளே.. இதோ உங்களுக்கான அரங்கம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.. வாருங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க ஒரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

Saturday 27 July 2013

தங்கம் நீ !

தங்கம் நீ...
எடைக்கல்லாய் நான்
போதும் உன் அளவென
புறப்பட்டு விட்டாய்..
காத்திருக்கிறேன் படிக்கல்லாய்.
தென்றலுக்கு 
காத்திருக்கும் மரம் நான்... 
ஏசியறைக்குள் பதுங்கும் 
காற்றாய் நீ...

Tuesday 23 July 2013

பிறையானவளுக்கு !


வானத்து நிலவே.....
வெகுதூரத்தில் வாழும்
வண்ணநிலவே -உன்
மலர்முகத்தில் இருள்
படர்ந்த சோகமேனோ ?
மேக ஓடைநீந்தும் போது
காயம் பட்டதோ ?
இடிமின்னல் சிதறலிலே
இதயம் சுட்டதோ!
 நடந்ததென்ன புரியவில்லை
நானும் தவிக்கறேன்!
நிலவே உன் முகமலர்ந்து
சிரித்து நீயும் ஒளியும்
 தருகிறாய் நானும்...
மனம் குளிர்ந்து
மகிழ்வு கொள்கிறேன்!
வானமே இடிந்ததுபோல்
தேய்பிறையாய் தேய்ந்து
நீயும் சோகம் கொள்கிறாய்
வளர்வதுவும் தேய்வதுவும்
வாழ்க்கையானதே
என எண்ணி எண்ணி
நீ அழுவதுதான் அமாவாசையோ......
உன் நிலையறியா தவிப்பினிலே
நிம்மதியை நானும் இழக்கிறேன்!
உன் வானம் வந்து பார்த்திடவே
மனமும் ஏங்குதே!

Wednesday 17 July 2013

வான் முத்தங்கள் !

சூராவளியாய் கடலில் நீரெடுத்து 
வானத்துக்கு மணமுடித்து 
மோகங்கொண்டு மேகமாய் 
கருவாகி காற்றின்கற்பம் 
மின்னலாய் உடைத்து 
இடியோசையுடன் பிரசவித்து 
மழைக்குழந்தைகளாய் 
இயற்கை வளங்களில் 
இனிமையான விளையாட்டு 
முத்தழகு குழந்தைகள் 
பூமியை முத்தமிடும் மழைத்துளிகள்...!

Wednesday 10 July 2013

காதல் கடிதம் !


உன்னில் நான் சரணடைந்து வெகுநாட்கள் ஆகிறது. என் அன்பை வார்த்தைகளால் கொட்டியும் விட்டேன் நீ வெறுப்பும் காட்டவில்லை விருப்பமும் சொல்லவில்லை என்னைக்கொல்லும் ஆயுதமாய் உன் மௌனம்! 

மனதை திருடி மடியில் வைத்துக்கொண்டாய்! அன்பை வளர்த்து உனக்குள்ளேயே புதைத்துக்கொல்கிறாய்! 

ஏனடி பெண்ணே உன் அன்பு தீண்ட எனக்கு அருகதை இல்லையா.... ? உன் பாசத்தை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் இல்லையா....?  உன் கண்கள் ஒன்று சொல்கிறது உன் கவிதை வேறு சொல்கிறது உன் சிரிப்பு ஒன்று சொல்கிறது நான் எதை எடுக்க எதை தொடுக்க.. எதை கொடுக்க 

என்னை வதை படுத்தி உன் மௌன வார்த்தைகளால் என்னை சிறைபடுத்தி விட்டாயே! உன் அன்பின் வாசல் திறக்கவில்லை என்றாலும் லேசாக சன்னலையாவது திறக்கக்கூடாதா..?  உன் அன்பின் வாசத்தில் வாழ்ந்துவிட மாட்டேனா? அடியே பெண்ணே உன் செப்படி வித்தையால் சீரழிந்து நிற்கிறேனே அடி பாசாங்குக்காரி பேசிக்கழப்புகிறாய் பேசாமல் மௌனமாய் கொல்கிறாய் அய்யோ.... ஆடிக்காற்றில் அம்மியாய் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்து ஏளனமாய் மனதுக்குள் மௌனமாய் திட்டுகிறாய் இன்னும் என்ன செய்யப்போகிறாய் ..?ஏன் இந்த சித்து விளையாட்டு உன்னில் நானிருக்கிறேன் என்னில் நீயிருக்கிறாய் காதலை சொல்வதற்கு என்ன தயக்கம் அடி பைத்தியக்காரி உன்னை என் இதய சிம்மானத்தில் வைத்து உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் என்னை இழந்து விட்டு முட்படுக்கையில் உறக்கமின்றி தவிக்க போகிறாயா?

 இது காதல் உனக்கிட்ட கட்டளையா? இல்லை காலம் எனக்கு தரும் தண்டனையா? சில நேரம் வானத்து நிலவாய் தொலைவில் நின்று மமதை கொள்கிறாய் சிலநேரம் வீசும் தென்றலாய் சிரித்துக்கொண்டு என்னை கடந்து செல்கிறாய் உன்னை புரிந்து கொள்ள முடியாமல் புயலில் சிக்கிய புழுவாய் என் மனம் தள்ளாடுகிறது!

 பூக்களில் தேனிருக்கும் பூக்கள் அறிவதில்லை வண்டுகள் தெரிந்து வந்தால் அதன் அன்பும் புரிவதில்லை மகரந்த சேர்க்கையில்தான் மௌனமாய் உணர்ந்து கொள்ளும் தன்னில் இத்தனை இன்பங்களா என்று! புரிந்து கொள்ளடிப்பெண்ணே காமத்திற்கு ஒவ்வொரு நாளும் எல்லை உண்டு இந்த உலகத்தில் அன்புக்கு ஏதெடி எல்லை நான் உன்னை அன்பால் நேசிக்கிறேன்! 

அன்பே உன் மௌனம் கலைத்துவிடு என் மனதோடு இணைந்துவிடு உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடவேண்டும் உன் மடியில் முகம் புதைத்து என் அன்பை சொல்லி அழவேண்டும் மனதும் மனதும் சேர்ந்தால்தானே இச்சைகூட சுவைக்கும் என் புழம்பல்கள் உனக்கு கேட்கவில்லையா இல்லை என்னையே உனக்கு பிடிக்கவில்லையா? 

சிலந்தி வலையில் சிக்கிய ஈயாய் தினம் தினம் சாகாமல் சாகிறேனே! வேண்டாம் உன் மௌனம் கலைக்க வேண்டாம் மறுமொழி பேசவேண்டாம் நீ அன்பு அமுதம் தரவேண்டாம்! என் உயிரே வா.... உயிர்வதை சட்டத்தின்கீழ் ஒரு துளி விஷமாவது கொடுத்துவிடு என்னை கருணைக் கொலை செய்துவிடு காலம் உன்னை வாழ்த்தும் என் காதலும் உன்னை வாழ்த்தட்டும்............!

Saturday 6 July 2013

காலத்தால் அழியா கண்ணதாசன் !

சிந்தனைக்கடலே!
செவியின்பத்தேனே!
கவி உலகமொன்றை
தமிழ் உலகுக்கு அற்பனித்தவனே!
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழே கண்ணதாசா நீயல்லவோ....!
தமிழுக்கும் அழிவில்லை
உன் புகழுக்கும் அழிவில்லை!
தமிழ் உனக்கு சிம்மாசனம் கொடுத்தது
அந்த தமிழுக்கே மகுடம்
சூட்டி மகிழ்ந்தாய்
எங்களையும் மகிழச்செய்தாய்!
அருவியாய் கற்பனை கொட்டி
குருவியாய் கவிபாடி
காற்றிலே பாட்டுக்கோட்டை
கட்டி பவனிவந்தாய்!
காற்றுள்ளவரை உன் பாட்டிருக்கும்
அதை தமிழ் உலகம் கேட்டிருக்கும்!
காலங்கள் அனைத்தையும் கணக்கிட்டாய்...........
வாழ்க்கை கோலங்கள் உணரவைத்தாய்!
கண்ணனின் தாசனாய் வாழ்ந்திருந்தாய்!
காரிருளாய் பண்பாடு மறையாமல்
உன் கருத்துக்கள் ஒளி நிலவாய்....
அர்த்தமுள்ள இந்து மதம் நீ கொடுத்தாய்!
எம்மதமும் சம்மதமாய்
எல்லா மதத்துக்கும் காவியம் படைத்தாய்!
நீ காலத்தால் அழியாத பொண்ணோவியமாய்
மனித உள்ளங்களில் நிறைந்திருப்பாய்........

Wednesday 3 July 2013

அமுத தமிழே.....!

அமுத தமிழே.....!
அன்புத் தமிழே...! 
இனிமைத் தமிழே....! 
இன்பத் தமிழே....! 
முத்தமிழே....! 
என் இனிய தமிழே... 
நான் உன்னை நேசிக்கிறேன்.! 
உன் அன்பை யாசிக்கிறேன் !
எப்போதும் உன்னையே 
சுவாசிக்கிறேன் !
எல்லாமும் நீயே என்று 
எனக்குள் யோசிக்கிறேன்!
எனக்குள் வா தமிழே !
உன்னால் நான் புகழ் 
பெறவேண்டும் !
என்றும் உன் புகழை 
நான் பாடவேண்டும்! 
நான் உன்னில் லயித்திருக்கிறேன் !
எனக்குள் வா தமிழே.... 
காவியம் படைத்திட !