Thursday 3 October 2013

மழழை மொழியில் தமிழை பதிவு செய்வோம்!


அழ வள்ளியப்பன் நிலவொளியில்
அல்லிமலர் மழழைகளாய்!
கல்வி என்ற சோலையிலே
பூத்திருக்கும் விடி வெள்ளி
மலர்க் குழந்தைகளே

உன் பூவிதழின்
வாசத்திலே பெருமிதமே!
புன்னகை பூப்பூக்கும் பேரழகே!
கார்முகிலாய்
கனிமொழி பொழியும்
காலம் தந்த சீதனமே!
அன்னை மொழியாம்
அமுத தமிழை
நாவினில் கொஞ்சிடு
தங்கமே
உன் பிள்ளைத் தமிழால்
அன்னைக்கும் சொல்லிக்கொடு
மம்மி இல்ல அம்மா என்று!
தனித் தமிழில் உரையாடு
தரணியெங்கும் தமிழின் புகழ்பாடு
தமிழ் எந்தன் உயிரென்று
தமிழாலே இசைபாடி
தலைநிமிர்ந்து நீ வாழு!
யாழ் மீட்டும் இசையாய்
செவ்வாய் முட்டும் தமிழால்
மழலை மொழித் தேன் சிந்து!
வான் போற்றும் வள்ளுவனாய்
தான் போற்றி வாழ்ந்திருப்பாய்.

32 comments:

  1. அழகான கவிதை...

    மழலை கவிதை அழகாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  2. வணக்கம் உங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மிக்க நன்றி

    ReplyDelete
  3. ஆகா... ஆகா... ரசித்தேன்...

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் ரசித்தமைக்கு மிக்கநன்றி

      Delete
  4. அன்னைக்கும் சொல்லிக்கொடு
    மம்மி இல்ல அம்மா என்று
    >>
    கண்டிப்பாய் சொல்லி கொடுக்கனும். அழகான அம்மாவை பிணத்தோடு ஒப்பிடல் தவறு என்று!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி மிகச்சரியாக சொன்னீர்கள் அம்மா தான் அழகு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  5. //தமிழ் எந்தன் உயிரென்று
    தமிழாலே இசைபாடி
    தலைநிமிர்ந்து நீ வாழு!// ரசித்தேன் உங்கள் வரிகளை.
    வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்!
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா தமிழ் வார்த்தைகளின் இனிமை ரசித்து படித்தமைக்கும் உங்கள் வருகைக்கும் வலைச்சர அறிமுக வாழ்த்திற்கும் மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி

      Delete
  6. அருமையான எதுகை மோனை யோடு ஒரு ராகமாக படிக்க வைப்பதில் வெற்றி பெற்று விட்டிர்கள் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  7. "உன் பிள்ளைத் தமிழால்
    அன்னைக்கும் சொல்லிக்கொடு" அழகிய ஆழமான பொருள் பொதிந்த வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  8. கவிச்சோலைக்கு பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  9. வணகக்ம
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் கவிதை அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  10. அழகான கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  11. சிறப்பான கவிதை! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  12. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  13. Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete

  14. வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....
    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  15. வணக்கம் எனது கவிதையையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க

    ReplyDelete
  16. //தனித் தமிழில் உரையாடு
    தரணியெங்கும் தமிழின் புகழ்பாடு
    தமிழ் எந்தன் உயிரென்று
    தமிழாலே இசைபாடி
    தலைநிமிர்ந்து நீ வாழு!
    யாழ் மீட்டும் இசையாய்
    செவ்வாய் முட்டும் தமிழால்
    மழலை மொழித் தேன் சிந்து!
    வான் போற்றும் வள்ளுவனாய்
    தான் போற்றி வாழ்ந்திருப்பாய்./// அருமை அருமை...

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி சகோதரி தங்கள்வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. மிக்க மகிழ்ச்சி சகோதரி தங்கள்வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. மிக்க மகிழ்ச்சி சகோதரி தங்கள்வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete